தெலங்கானாவில் 15வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 15வது நாளாக போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தை அரசுத் துறையாக அறிவிக்க வேண்டும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல், தெலுங்கானா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பணிக்குத் திரும்ப அரசு எச்சரித்தும், ஊழியர்கள் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

Exit mobile version