ரயிலில் இருக்கையை தேர்ந்தெடுக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம் – ரயில்வே அமைச்சர்

ரயில் பயணிகள் தங்களுக்கான இருக்கையை தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று, ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விமான பயணம் போன்று ரயில்வே துறையிலும் பயணிகள் தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்வு செய்வதற்கு வசதியாக இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது காலியாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் மேப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்மூலம், தங்களுக்கு தேவையான இருக்கைகளை பயணிகளே தேர்ந்தெடுத்து கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version