மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில், 132 நாட்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக சரிந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 29 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 415 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது.

42 ஆயிரத்து 363 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். 3 லட்சத்து 98 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 44 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version