முகெனுக்கு ரேஷ்மா சொன்ன அந்த வார்த்தை : கண்ணீரில் முகென்

பிக்பாஸ் வீட்டில் இன்று 100வது நாள்.எதிர்பாராத விதமாக நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.இது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வீட்டில் உள்ள அனைவரும் தர்ஷன் வெளியேறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிக்பாஸிடம் வாக்குவாதம் செய்தனர்.ஆனால் தர்ஷன் வெளியேற வேண்டும் என பிக்பாஸ் கூறிவிட்டார்.தர்ஷனின் பிரிவை தாங்கமுடியாத ஷெரின் ‘என்னால தான் தர்ஷன் வெளியே சென்றான், அவன் தான் இங்க இருக்க வேண்டும்’ என கூற அனைவரும் சமாதானம் படுத்தினர்.இப்படியே நேற்றைய நாள் முடிந்தது.

இன்றைய பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களான மீரா மிதுன், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா ஆகியோர் வருகின்றனர்.அனைவரையும் பார்த்தவுடன் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டனர்.

பின்பு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டில் நடைப்பெற்ற மறக்கமுடியாத தருணத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.அப்போது ரேஷ்மா’நம்ம எல்லாரும் ஏங்குறது அன்புக்காக தான்,நானா இருக்கட்டும் முகெனா இருக்கட்டும் எல்லாருமே தான்.ஆனா நீ மட்டும் தனியா இல்ல முகென் இங்க எல்லாருமே அப்படி தான் வந்தோம்.இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது, அன்பு இல்லாத உலகமே கிடையாது, நீ வெளில வந்தா தான் உனக்கு எவ்வளோ அன்பு இருக்குனு தெரியும் என கூற,இதனை கேட்ட முகென் கண்ணீரோடு ரேஷ்மாவை கட்டிக்கொண்டு அழுகிறார்.

இதே போல் லாஸ்லியாவும் தனது மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுகிறார்.இன்று அனைவரும் தங்களின் மனதில் உள்ள சோகங்களை பகிர்ந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version