மாநிலங்களவை தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

தமிழகத்தில் 6 இடங்களுக்கு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது. அதிமுக கூட்டணி சார்பில் முகமது ஜான், சந்திர சேகரன், அன்புமணி ராமதாஸ் போடியிடுகின்றனர். இவர்கள் மூவரும் தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தங்களது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 11ம் தேதி கடைசி நாளாகும். திமுக தரப்பில் வில்சன், சண்முகம் மற்றும் மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துவிட்டனர். 6 பேருக்கு மேல் போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடைபெறும். இல்லையெனில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும்.

Exit mobile version