மக்களவை சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் மக்களவை சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உரையுடன் நாளை துவங்குகிறது. இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் நாளை உரை நிகழ்த்துகிறார். இதனைத் தொடர்ந்து, வரும் 1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மகக்ளவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்துக் கொள்கின்றனர். மேலும் கூட்டத்தில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version