டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு எதிராக 35 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி

டி.என்.பி.எல். தொடரின் 25வது லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

நெல்லை ஐசிஎல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக அபினவ் முகுந்த் 21 ரன்களுக்கும், ஷாருக்கான் 30 ரன்களும் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரதோஷ் ராஜன் 43 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கோவை கிங்ஸ் 134 ரன்கள் எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய சுஜய் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து கோவை கிங்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Exit mobile version