தமிழ் கீர்த்தனைகளை பாடிய தமிழிசை மூவர் திருவிழா

சீர்காழியில் தமிழ் கீர்த்தனைகளை பாடிய தமிழிசை மூவர் விழாவில் இசை கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மூவரை ஆராதித்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகியோர் தமிழ் கீர்த்தனைகளைப்பாடி தமிழிசையை வளர்த்தனர். அவர்களை போற்றும் வகையில் தமிழிசை மூவர் விழா தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு இசை மற்றும் பாட்டு பாடி தமிழிசை வளர்த்த மூவரை ஆராதித்தனர். இந்நிகழ்ச்சியில் இசைஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version