பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட நரம்பு

பிரசவ அறுவை சிகிச்சையில், தைக்க பயன்படுத்தும் நரம்பை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் பிரசவத்திற்காக காரைக்காலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்பு ஜெயந்திக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்த போது அறுவை சிகிச்சையில் தைக்க பயன்படுத்தப்படும் நரம்பு ஜெயந்தியின் வயிற்றின் உள்ளே வைத்து தைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவறிழைத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

Exit mobile version