பல்லடத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

பல்லடத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற நாராயணி பீடம் அமைந்துள்ளது. நாராயணி அம்மனின் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டு நன்கொடையாக கோயிலுக்கு கிடைக்கப் பெற்றதாகும். இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புடைய சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version