பட்டப்பகலில் கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பட்டப்பகலில் கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகளால் ஆன சாமி சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூரில், ஜெயமங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒன்றரை அடியிலான சிவ துர்கையம்மன் ஐம்பொன் சிலை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

செவ்வாய்க் கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திய மர்ம கும்பல் கோயிலின் கதவை உடைத்து சிலையயை திருடிச் சென்றுள்ளனர் . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Exit mobile version