ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைவு

ஒகேனக்கலுக்கு தொடர்ந்து 2வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக உள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், இன்று 2வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக  உள்ளது. நீர்வரத்து குறைந்தாலும், அருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அருவியில் குளிக்க 175வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 108 கனஅடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 107 புள்ளி 44 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 74 புள்ளி 82 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 

Exit mobile version