தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குப்வாரா மாவட்டத்தில் எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் சுபேதார் ராமன் சுபேதார் பகதூர் தபா ஆகிய இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்கள் சொந்த ஊரான வாரணாசிக்கு கொண்டு செல்லப்பட்டு, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடல்களுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version