ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை இன்று அறிவிக்கப்படுகிறது

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப்பட உள்ளது. வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றவுடன் மும்பையில் நடைபெற்ற முதல் நிதிக்கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து 2 மாதங்களில் வட்டி விகிதம் மீண்டும் கால் சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் சில்லறை பணவீக்கம் குறைந்து வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில் வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version