புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு 22 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல், காளைகளை 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

Exit mobile version