விநாயகர் சதூர்த்திக்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுப்பகுதிகளில் அரசு விதிமுறைக்கு உட்பட்டு நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையிலும், நீரில் உள்ள உயிரினங்களுக்கு உயிர் சேதமும் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் விநாயகர் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 2 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை தயாரிப்பாளர்கள் ஆங்காங்கே சிலை தயாரிக்கும் பணிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கண்ணைக் கவரும் வர்ணங்களில், பிரமிக்க வைக்கும் ரூபங்களில் விநாயகப் பெருமான் காட்சியளிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்கிறது.

Exit mobile version