மேட்டூர் காவிரி கரையில் 2,500 விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி கரையில் நேற்று ஒரே நாளில் 2,500 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் மேட்டூர் காவிரியில் கரைத்தனர். கொளத்தூர், நள்கவள்ளி, ஜலகண்டபுரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும், பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வந்த, இந்த சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மேட்டூர் காவிரி கரைகளில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு அதிகமாக சிலைகள் கரைக்கப்பட்டன.

Exit mobile version