காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு -சென்னையில் மினி மாரத்தான்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னையில் காவலர்களுக்கான மினி மாரத்தான் நடைபெற்றது.

அக்டோபர் 21 காவலர்களின் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக,சென்னை பெருநகர காவல் மற்றும் பூக்கடை காவல் மாவட்டம் சார்பில் மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டது.

2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மத்திய காவல்படை, மாநகர காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு உயர் அதிகாரிகள் பரிசுகளை வழங்கினர். இந்த மாரத்தானில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Exit mobile version