தீபாவளிக்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஆயிரம் விரைவு பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 800 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிதத்து. அதன்படி, தீபாவளிக்காக அரசு விரைவு பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது. 2 நாட்களுக்கு முன்பதிவு நடைபெறும். நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பயணம் செய்ய விரும்புவோர், இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், முன்பதிவு செய்து வருகின்றனர்.

Exit mobile version