ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பூக்கும் அரியவகை பூ

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் காஹ்லேன்றா பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சீசனுக்கு மட்டும் பூக்கும் பூவான காஹ்லேன்றா என்ற அரியவகை பூ பூத்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் பூக்கும் இந்த பூ, பெரும்பாலும் பனிப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படுகின்றன. சிவப்பு மற்றும் பிங்க் நிறங்களில் காட்சி அளிக்கும் இந்த பூ, நூற்றுக்கணக்கான இதழ்களுடன் காணப்படுகிறது. இது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version