எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இளையமகன் பிரான்ஸ் நாட்டில் இருந்து இன்றிரவு வரவுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் 4 மணிவரை பிரபஞ்சனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் நாளை இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Exit mobile version