இலங்கையில் கங்காராம விகாரையின் 41-வது நவம் மகா பெரஹெர நிகழ்வு

இலங்கையில் கங்காராம விகாரையின் 41-வது நவம் மகா பெரஹெர நிகழ்வு, அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்றது.

கொழும்புவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய சிறிசேனா, கலாச்சாரத்தின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வாக இதனை பார்ப்பதாக கூறினார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும், கலகொட ஞானிஸ்ஸர தேரர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கங்காராம விகாராதிபதி சங்க நிர்வாகிகள், ஏராளமான வெளிநாட்டினரும் இதில் கலந்து கொண்டனர்.

Exit mobile version