நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது- தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லி இருப்பதை சுட்டிக்காட்டினார். காவிரியில் புதிய அணை கட்ட வேண்டும் என்றால் அண்டை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றார் அவர். நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என்றும் தம்பிதுரை கூறினார்.

Exit mobile version