தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் வரும் திங்கட் கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறை நிறைவடைந்து, வரும் திங்கட் கிழமை அனைத்து அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வகையில் புதிய பாடத்திட்டத்துடன் கூடிய பாடப்புத்தகங்கள், ஆண்டுதோறும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தூத்துக்குடியில் பாரதிய வித்யாலம் பள்ளியில், பாட புத்தகங்கள் வைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வினியோகிகப்பட்டது. வரும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

Exit mobile version