அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் புதிய உத்திகளை புகுத்தி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது.

ஆதார் எண் மூலம் ஆசிரியர்கள் கைரேகை வைத்து வருகை நேரத்தை பதிவு செய்தனர். தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள் தாமதம் இல்லாமல் பள்ளிக்கு வருகை தருவது உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version