இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதைத் தடுக்கவும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹாவல்புரில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், லஷ்கர் இ தொய்பாவின் தளபதியான அபு உசாயில், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் அங்கு திரண்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version