தென்காசி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் பேசிய அவர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமையும் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version