ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப தகராறு காரணமா?

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரி அடுத்த வடக்கு சென்னி நத்தம் பகுதியை சேர்ந்த இளவரசனும், சரண்யாவும், கடந்த 10 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இளவரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், சரண்யா வீட்டின் அருகே உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சரண்யாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து அவரது வீட்டின் முன் பள்ளி மாணவ, மாணவிகள் சோகத்துடன் திரண்டனர். திருமணமான 10 மாதங்களில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version