தமிழகத்தில் திண்ணை நாடகம், டெல்லியில் தெருக்கூத்து நடத்த ஸ்டாலின் முயற்சி: தமிழிசை

தமிழகத்தில் திண்ணை நாடகம் மற்றும் டெல்லியில் தெருக்கூத்து நடத்த மு.க.ஸ்டாலின் முயல்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மத்தியில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி, மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவராக கலந்தாய்வு மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே திண்ணை நாடகம் நடத்தும் ஸ்டாலினுக்கு, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் நடைபெறும் குதிரை பந்தயத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version