தென் மண்டல அளவிலான ரோல் பால் போட்டியில் தமிழக அணி முதலிடம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான ரோல் பால் போட்டியில் தமிழக அணி முதலிடம் பிடித்துள்ளது.

சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு மற்றும் கேரள அணிகள் மோதின. பரபரப்பான இறுதிப்போட்டியில் கேரள அணியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி வீழ்த்தியது.

இதேபோல் ஆண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் கேரள அணியை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி வீழ்த்தியது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் மாநிலத்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி பங்கேற்கிறது.

Exit mobile version