மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரை சந்தித்து, தமிழக அரசின் கருத்துகளை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவித்தனர்.

அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் நலன் கருதி சில கருத்துகளை எடுத்துரைக்க அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றனர். மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர். அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமிழக அரசின் கருத்துகளை மத்திய அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version