பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்படுகிறது. வரும் 8-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசுக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி ஆகியோர் கலந்துகொண்டு இந்த விருதினை பெறுகின்றனர்.