சமூக நீதி பேசக்கூடிய விடியா திமுக ஆட்சியில் பட்டியலின மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக தேசிய பட்டியலின ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை வந்துள்ள தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹெல்டர், அந்த ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாரியை ஜாதியை சொல்லி திட்டிய விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலினத்தை சார்ந்தவர் என தமிழ்நாடு தாட்கோ இயக்குனர் கூறியது பொய்யென தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பட்டியலின மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக அருண் ஹெல்டர் தெரிவித்தார்.