குடிமராமத்து பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம்: அமைச்சர்

குடிமராமத்து பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

பொள்ளாச்சி அருகே ஏ.நாகூர், ஆவல்பட்டி, ஜோத்தம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள குட்டைகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் விவசாயிகளின் எண்ணங்களுக்கு ஏற்ப குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தெலங்கானா மாநிலமும் குடிமராமத்து பணிகளை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

Exit mobile version