தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடிக்கல் நாட்டு விழா

விழுப்புரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

உளுந்தூர்பேட்டை யில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் கலந்துக்கொண்டு புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் மத்திய மாநில நிதி மற்றும் பயனாளிகளின் பங்குத்தொகையுடன் கூடிய ஒவ்வொரு வீடும் 400 சதுர அடிகள் கொண்ட 264 அடுக்கு மாடி குடியிருப்புகள் 24 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது.இக்குடியிருப்புகள் சுமார் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version