பொய்யான புகார் கூறுவதாக சுசிகணேசன் குற்றச்சாட்டு!

மீ டூ ஹேஷ்டேக் மூலம் நடிகைகள், பாடகிகள் என பல தரப்பினரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல், இயக்குநர் லீனா மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில், இயக்குநர் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசிகணேசன் குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், எந்த அடிப்படை ஆதாரமுமின்றி பொய்யான புகரை லீனா மணிமேகலை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version