பள்ளி உணவுக் கூடங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும்: விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளில் உள்ள உணவுக் கூடங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தை அவர் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மூன்றாம் பாலித்தனவர் தங்களுக்கான பிரத்யேக சிகிச்சைகளை அனைத்து நேரத்திலும் பெறும் வகையில் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதன்மூலம் மருத்துவ துறையில் மூன்றாம் பாலினத்தவருக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

அரசு மற்றும் தனியார் உணவுக் கூடங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version