கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!

தென்திருப்போரை அருகே உள்ள கடம்பாகுளம் பகுதியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி, குளத்தின் சீரமைப்பு பணிகளை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்நிலையில், நிகழ்ச்சிக்காக அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மேடைக்கு திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் விடியா அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version