மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கர்நாடகா அரசு இதுவரை 17 பேர் கொண்ட பெயர் பட்டியலை மட்டுமே அனுப்பியுள்ளதாகவும், 90 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version