கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தையொட்டி வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது,

மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் பிரபாகர் துவங்கி வைத்தார். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்ட கையேட்டையும் அவர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் வறுமையை ஒழிப்பதில் சிறு குறு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக் காட்டினார். மேலும் மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு துணை மின் நிலையங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version