வெற்றி பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார் ஸ்டாலின் – அமைச்சர் தங்கமணி

திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை திசை திருப்புவதாக என அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், உப்பு பாளையம், பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரோடு மக்களவை அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறனுக்கு, அமைச்சர் தங்கமணி நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று கூறிய திமுக அதை செய்தார்களா? என்று கூறி மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர் படைவீடு பகுதியில் சாலை ஓரத்தில் அமைந்துள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தினார். இதனைக் கண்டு அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version