காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஸ்டாலின் படுதோல்வி அடைவார்

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதவி வெறியால் படுதோல்வி அடைவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் கரும்பலையில் விவசாயிகளுக்கு கரும்புக்கான கிரயத்தொகை வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசு விவசாயிகளுக்கு அதிக சலுகைகளை வழங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினார். மேலும், அதிமுக தொடர்ந்து மக்களுக்கான ஆட்சியை கொடுத்து வருவதை யாரும் தடுக்க முடியாது என்றும், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் பதவி வெறியால் படுதோல்வி அடைவார் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version