தோல்வி பயத்தாலேயே அதிமுக கூட்டணியை ஸ்டாலின் விமர்சிக்கிறார்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவிடம் அவர் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் மணிகண்டன் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால், அதிமுக கூட்டணியை விமர்சித்து வருவதாக கூறினார்.

Exit mobile version