ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்

இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அரிச்சல் முனைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், மீன்பிடி சாதனங்கள் மற்றும் ஆவணங்களை சேதப்படுத்தினர். மீனவர்கள் வைத்திருந்த மீன்கள் மற்றும் படகு ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த தமிழக மீனவர்கள் கடற்படை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Exit mobile version