அத்திவரதரை தரிசிக்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது: விஜயபாஸ்கர்

அத்திவரதரை தரிசிக்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிகளவில் பக்தர்கள் கூடுவதால் நோய்தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல், அத்திவரதைரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகள் செய்யப்படிருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாளிக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை செயலாளர் சண்முகமும் டிஜிபி திரிபாதியும் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

Exit mobile version