தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த சிறப்பு அதிகாரி

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் விரைவாக செயல்படுத்துவதற்கான அதிகாரியாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தில் கூடங்குளம் அணுவுலை விரிவாக்கம், பாரத்மால பரியோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய சாலைகள் போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் இதில் உள்ள சிக்கல்களை களைவதற்காகவும் மத்திய அரசுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் துணை செயலாளர் ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version