இலங்கை தமிழர் படுகொலைக்கு திமுக-காங். உறுதுணையாக இருந்தது: எஸ்.பி. வேலுமணி

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு உறுதுணையாக திமுக மற்றும் காங்கிரஸ் இருந்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி அருகே பில்சின்னபாளையம், கரியாசெட்டிபாளையம், பாரைமடையூர் ஆகிய பகுதிகளில் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்தியிலும் மாநிலத்திலும் கடந்த 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, காவிரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு, இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

 

Exit mobile version