“ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”

பொய் பேசுவது மட்டுமே ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே கொள்கை, அவரைப் போல ஒரு மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டுமென்பதற்காக, ஸ்டாலின் எல்லை மீறி பொய் பேசி வருவதாகவும், கருணாநிதி இருந்தவரை ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கவில்லை என்றும் கூறினார்

Exit mobile version