இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தென்னக ரயில்வே அணி சாம்பியன்

கோவையில் நடைபெற்ற இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில், பெண்களுக்கான பிரிவில் சென்னை தென்னக ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

54வது நாச்சிமுத்து கோப்பை மற்றும் 18வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. மோட்டார் பம்புகள் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த மே 27ஆம் தேதி துவங்கியது. கோவையில் வ.உ.சி. விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் அகில இந்திய அளவிலான 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை தென்னக ரயில்வே அணியை எதிர்த்து, செகந்தராபாத் தென் மத்திய ரயில்வே அணி விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், தென்னக ரயில்வே அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற தென்னக ரயில்வே அணிக்கு பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், சி.ஆர்.ஐ சுழற்கோப்பையும் வழங்கபட்டது. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், வருமான வரி அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் நாச்சிமுத்து கோப்பையை தட்டி சென்றது.

Exit mobile version