அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு பெருகும் ஆதரவு

 

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு, ஓய்வு பெற்ற 700 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓய்வு பெற்ற 700 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர்கள் பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version